பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
காரைக்குடி: இளையாத்தங்குடி அங்காளம்மன், மலையாளக் கருப்பையா கோயில் கப்பரைத் திருவிழா நாளை (பிப்.11) நடக்கிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு குருவிக்கொண்டான்பட்டி, நச்சாந்துபட்டி, வலையபட்டி, மேலைச்சிவபுரி, ஆவினிப்பட்டி, விரையாச்சிலை, கீழச்சிவல்பட்டி, பனையப்பட்டி, தேவகோட்டை நகரத்தார்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நாளை தொடங்கி பிப்., 16ல் நிறைவடைகிறது. விழா நாட்களில் அங்காளம்மன் மலையாளக் கருப்பையாவுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். நாளை இரவு 12:00 மணிக்கு, கப்பரை எடுத்து மலையாளக் கருப்பையா வீதியுலா நடக்கிறது. நகரத்தார், பாட்டையா பூஜாரி சரவணன் பண்டாரம் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.