Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமலாபுரத்தில் அருளானந்தர் ... திருப்பரங்குன்றத்தில் கப்பரை திருவிழா திருப்பரங்குன்றத்தில் கப்பரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டும் வரம் தரும் மூங்கிலணை காமாட்சி அம்மன்!
எழுத்தின் அளவு:
வேண்டும் வரம் தரும் மூங்கிலணை காமாட்சி அம்மன்!

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
03:02

தேவதானப்பட்டி: திருமணத்தடை நீக்கம், குழந்தைப்பேறு என வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கிறார் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். தேவதானப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ளது. மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில். இங்கு மூலஸ்தானம் எனும் குச்சுவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் வழங்கும் நெய் மூலமாக பகல், இரவு என 24 மணி நேரமும் அணையாவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

காமாட்சி அம்மனின் பக்தையும், ஆதிஜமின் தாரிணியும், பரம்பரை அறங்காவலர்களின் மூதாதையுமான காமக்காள் தனது மகனின் பிரிவால் வருந்தினார். அதற்காக அம்மன் உத்தரவுப்படி அந்த வாலிபரின் நினைவு தினமாகிய தை மாதம் ரதசப்தமி சுபதினத்தன்று பரம்பரை அறங்காவர்களால் ஆண்டு தோறும் சடங்கு செய்யப்பட்டு அதன் பிறகு மாசி மகாசிவராத்திரி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இந்தாண்டு ஜன., 24ல் முகூர்த்தக்கால் நடப்பட்டு பிப். 13 முதல் பிப். 17 வரை திருவிழா நடக்கிறது. திருமண தடை நீக்கி, குழந்தைபாக்யம், வேலை வாய்ப்பு, தொழில் அபிவிருத்தி என பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் அம்மன் நிறைவேற்றுவதாக நம்பிக்கை உள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் திருவிழாவில் அக்னி சட்டி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். குழந்தை பாக்யம் பெற்றோர் கரும்பு தொட்டிலில் குழந்தையை கொண்டு வந்து அம்மனை வழிபடுவர். மேலும் விபரங்களுக்கு செயல் அலுவலர் சந்திரசேகரனை 94431 92101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar