ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்ற, கோயில் நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு, மேற்கு, நுழைவு வாசலில் உள்ள 44 கடைகள் உள்ளது. இக்கடைகளால் 1974ல் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றாம் பிரகார துாண்கள், சிற்பங்கள் சேதம் அடைந்தது. இதனை சிமென்ட் கலவையில் சரி செய்து, பழமையை புறக்கணித்தனர். இதற்கு அப்போதைய ஆன்மிக பெரியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து, வரலாற்று தலமான இக்கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்ற இந்து அமைப்பினர், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடைகளை அகற்றிட வியாபாரிகளுக்கு, கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்: கோயிலுக்குள் உள்ள 44 கடையும் அகற்றிட ஏற்கனவே வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில், தற்போதும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட் மூலம் விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்றார்.