வடமதுரை;வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.17-ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்குகிறது. அன்று முதல்நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வருவார். பிப்.25-ல் அம்மன் சாட்டுதலும், பிப்.27 முதல் மார்ச் 3 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். மார்ச் 4 இரவு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மார்ச் 5ல் அக்கினிச்சட்டி,மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்ச் 6-ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை கோயில் தக்கார் கணபதிமுருகன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.