பதிவு செய்த நாள்
12
பிப்
2018
02:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி கோவில் மயான சூறைத்திருவிழா, நாளை கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி காலை, 9:00 மணிக்கு ஹோம நிதான புன்யாஹ வாசனம், கொடி ஏற்றம், முளைப்பாரி எடுத்தல், மஹா கணபதி ?ஹாமம், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. வரும், 14ல் மஹா சிவராத்திரியும், 15ல் சக்தி கரகம், அக்னி கரகம் எடுத்தல் நடக்கிறது. மதியம், 1:15 மணிக்கு அம்மன் மயான சூறை புறப்படுதல் நடக்கிறது. 16 மதியம் அம்மனுக்கு விடாய் கஞ்சி ஊற்றுதலும், 17 மாலை, 6:00 மணிக்கு தீமிதி விழாவும் நடக்க உள்ளது. 18 பகல், 1:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை, 5:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். 19 இரவு, 8:00 மணிக்கு கும்ப பூஜையும், கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் பர்வதராஜகுல மீனவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர். இதேபோல், காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயான சூறை திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.