பதிவு செய்த நாள்
14
பிப்
2018
11:02
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி முருகன்கோயில் உபகோயிலான, மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று (பிப்.13ல்) திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். , பிப்.,20ல், இரவு கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நடக்கிறது. பிப்.,21ல் அடிவாரம், குமாரசமுத்திரம் அழகுநாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணமும், பிப்.,23ல் மாரியம்மன்கோயிலில் சுமங்கலிபூஜையும், பிப்.,27 ல் திருக்கல்யாணமும் நடக்கிறது. பிப்.,28ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,20 முதல் மார்ச் 1 வரை மாரியம்மன் தங்கமயில், சப்பரம், தங்ககுதிரை, யானை, சிம்மவாகனங்களில் உலா வருதல் நடைபெறும். பிப்.,26முதல் 28 வரை பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா செய்கின்றனர்.