பதிவு செய்த நாள்
14
பிப்
2018
11:02
பழநி: மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி சிவன் கோயில்கள் சிறப்பு பூஜைகள், கிராமங்களில் குலதெய்வ வழிபாடு நடந்தது. இடும்பன் மலை அருகே பஞ்சமுக பிரபஞ்சநாதர், வில்வக்குடில் கோயிலில் கணபதி ஹோமம்,ருத்ர யாகம், உமா மகேஷ்வர பூஜை, இரவு 12 மணி, உச்சிகாலபூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.
கோதைமங்கலம், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில், புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன், ஏகாம்பரமேஸ்வரர் கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில் என, பல கோயில்களில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 12 மணிக்குமேல் உச்சிகாலபூஜை, அர்த்தஜாம பூஜைகள் நடந்தது.நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மகாசிவராத்திரியை முன்னிட்டு, பழநி பெரியாவுடையார் சிவன்கோயிலில் நடனம், நாடகம் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.பழநி முருகன் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி., சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பல்வேறு அமைப்புகளின் நாதஸ்வரம், பரதநாட்டியம், நாட்டியநாடகம் என, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். சித்தனாதன் சன்ஸ் விஜயகுமார், சாய்கிருஷ்ணா மகளிர் மருத்துவமனை டாக்டர் கீதா, சுப்புராஜ், கோவை குமரகுரு நாட்டியாலா தாரணிசாய்ராம் கலந்து கொண்டனர்.