புதுச்சேரி : புதுச்சேரி சிவாலயங்களில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில், காளத்தீஸ்வரன் கோவில், கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவில், மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவில், இரும்பை மகா காளீஸ்வரர் கோவில், காராமணிக்குப்பம் சக்திவேல் பரமானந்தா கோவில், பாகூர் மூலநாத சுவாமி கோவில், ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவில்களில் விடிய விடிய மகா சிவராத்திரி பூஜைகள், சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் செய்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதேபோன்று, வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி கெங்கா வராக நதீஸ்வரர் கோவில், வி.மணவெளி சிவன்கோவில் உள்ளிட்ட வில்லியனுார் பகுதி சிவாலயங்களில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.