பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
ராமநாதபுரம்:மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு சன்னதி முன்புறமுள்ள பிரதோஷ நந்திக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் சிவநாம அர்ச்சனை, பிரதோஷ பக்திபாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை அன்னதான பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர். மேலக்கிடாரத்தில் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத காமாட்சியம்மன் கோயிலில் பிரதோஷம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்புறமுள்ள பிரதோஷநந்திக்கு மூலிகை அபிஷேகம் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி, சிவபுராணம் பாடி சிவநாம அர்ச்சனை செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கீழக்கரை மீனாட்சி சொக்க நாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு,உற்சவர் பிரகார வீதியுலா நடந்தது.ரெகுநாதபுரம் வல்லபேஸ்வரர் சன்னதியில் நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றியும், சிவநாம அர்ச்சனையுடன் பூஜை செய்தனர். அபிஷேக ஆராதனை நடந்தது.ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவைநிலைய அறக்கட்டளையினர்செய்திருந்தனர்.
நரிப்பையூரில் பழமையான ஆதிஈஸ்வரன் கோயிலில்மண்ணில் புதைந்த நந்திபகவானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன்புறமுள்ள கருப்பண்ணசாமிக்கு 11 ம் ஆண்டு சந்தன அபிேஷகம் நடந்தது. முன்னதாகதொடர்ந்து இளநீர் காவடி, சந்தனம் குடம் சுமந்து வந்த பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தனர்.பின்னர் பல்வேறு வகையான அபிேஷகம் நடந்து, கருப்பண்ணசாமி சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பொங்கல் இடும்நிகழ்ச்சி நடந்தது.
எமனேஸ்வரம் சித்தி விநாயகர் கோயிலில் 48ம் ஆண்டு மகா சிவராத்திரிஇசை விழா நடந்தது. முதல் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு சித்திவிநாயகருக்கு அபிேஷகம், தீபாராதனை நிறைவடைந்து பிரசாதம்வழங்கப்பட்டன.தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரிநடந்தது. இன்று மதுரை குழுவினரில் தீபகேளிக்கை கோலாட்டமும், நாளைசவுராஷ்ட்ர பல்சுவை கதம்ப நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. ஏற்பாடுகளைசித்தி விநாயகர் கோயில் கமிட்டி தலைவர் சாந்தாராம் உள்ளிட்ட குழுவினர்செய்துள்ளனர்.
பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர் கோயில்களில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை நான்கு கால பூஜைகள்,அபிேஷக, ஆராதனை நடந்தது.பரமக்குடி காக்காதோப்பு பதினெட்டுபடி கருப்பண்ணசாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதே நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் இரவு முழுவதும் பக்தர்கள் தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி பத்திர காளியம்மன்,கருப்பன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.முன்னதாக குல தெய்வத்தினர் கோயில் முன் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையல் செய்தனர்.அதைத் தொடர்ந்து இரவில் சுவாமிக்கு சிவராத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.