பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
ஸ்ரீவில்லிபுத்துார்:மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி குலதெய்வ கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், செண்பகதோப்பு பேச்சியம்மன் கோயில், மாயாண்டிபட்டி பத்ரகாளியம்மன் கோயில், கம்மாபட்டி இருளப்பசாமி, பெரியமாரியம்மன் கோயில் உட்பட 50க்கு மேற்பட்ட கோயில்களில், நேற்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு நேற்று காலை ரயில், வாடகை வாகனங்களிலும் அதிகளவில் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் நகர் மற்றும் சுற்று கிராமங்களுக்கு வந்ததால், நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பூ, தேங்காய், மாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்திருந்தது. தேனி, மதுரை, சென்னை, வேலுார், கோவை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர். டி.எஸ்.பி.,ராஜா தலைமையில் 300க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.