திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா இன்று துவங்குகிறது. நாளை பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி திருவிழா நடக்கிறது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இன்று துவங்குகிறது. இதில் சிறப்பு பெற்ற பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி பிப்.15ல்(நாளை ) நடக்கிறது. . பிப்.16ல் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது நகருக்குள் பூத்தேர் பவனி வரும். பிப்.18 ல் சாட்டுதலும், பிப்.20ல் கொடியேற்றமும் நடக்கிறது. இவ்விழாவையொட்டி நகரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். டி.எஸ்.பி., சிகாமணி தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.