தியாகதுருகம் : சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் மாசித்திருவிழா , கொடியேற்றத்துடன் துவங்கியது. தியாகதுருகம் அடுத்த சித்தலுார் மணிமுக்தா ஆற்றின் கரையில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. மகாசிவராத்திரியான நேற்று, கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா துவங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு பூஜைகளும் செய்தபின்னர், மணிமுக்தா ஆற்றில் இருந்து சக்தி அழைத்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தபின்னர், கொடியேற்றி திருவிழா துவங்கியது. தொடர்ந்து வரும் 21ம் தேதி மயானகொள்ளை நிகழ்ச்சியும், 22 ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.