பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
நாமக்கல்: சிவராத்திரியை முன்னிட்டு, மாவட்ட தர்ம ரக்ஸண சமிதி சார்பில், 1,008 சிவலிங்க பூஜை நடந்தது. நாமக்கல், தர்ம ரக்ஸண சமிதி சார்பில், ஆறாமாண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது. அதில், 1,008 சிவ லிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. விழாவுக்கு, மாவட்ட தலைவர் கோபுமாதவன் தலைமை வகித்தார். மாலை, 6:30 மணிக்கு துவங்கி, இரவு, 9:30 மணிவரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் வில்வம், பல்வேறு மலர்கள், திருநீறு உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். சக்தி கல்வி கலாசார அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.