பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால், நேற்று பூச்சாட்டுதல் வைபவம் நடந்தது. குமாரபாளையத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. நேற்று இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல் வைபவம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குண்டம் இறங்கவிருக்கும் ஆண், பெண் பக்தர்கள் மஞ்சள் ஆடையுடன், காப்பு கட்டிக்கொண்டு விரதம் துவங்கினர். வரும், 28ல், மகா குண்டம், மார்ச், 1, 2 ஆகிய தேதிகளில், வண்டி வேடிக்கை, தேர்த்திருவிழா, வாண வேடிக்கை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.