பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
ஓசூர்: ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பேவநத்தம் மலை மீதுள்ள சிவாநஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் மலை மீது ஏறி, சுவாமியை தரிசனம் செய்தனர். வனப்பகுதிக்குள் கோவில் அமைந்துள்ளதால், பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் சமேத மரகதாம்பாள் கோவில், தெப்பக்குளம் பத்ரகாசி விஸ்வநாதர் கோவில், மதகொண்டப்பள்ளி அரிகேஸ்வர சிவன் கோவில், அத்திமுகம் ஐராவதீஸ்வரர் கோவில், சூளகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.