சிங்கம்புணரி: பிரான்மலையில் மகா சிவராத்திரியையொட்டி பால்குட விழா நடந்தது. இதையொட்டி பாலமுருகன் தெய்வீகப்பேரவை சார்பில் திருக்கொடுங்குன்ற நாதர் கோயிலில் இருந்து மலை உச்சியில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துச்செல்லப்பட்டது. விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையேற்று பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி முன்னிலை வகித்தார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து மலை உச்சிக்குச்சென்றனர். அங்கு பாலமுருகன் சன்னதியில் வேலுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.