பதிவு செய்த நாள்
15
பிப்
2018
11:02
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை வட்டம் செட்டியக்காடு கிராமத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. கடந்த 35 ஆண்டுகளாக செட்டியக்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கு எங்கும் இல்லாத சிறப்பாக மூலவராக அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். இவ்வாண்டும் நடந்த மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மூலவர் அர்த்தநாரீஸ்வரருக்கும் மஞ்சள் பொடி, அரிசிமாவு, திரவிய பொடி, தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, எழுமிச்சை சாறு, இளநீர், சந்தனம், பன்னீர் கலசாபிேஷகம் உள்ளிட்ட அபிேஷகங்களால் நான்கு கால பூஜைகளும் வெகு விமரிசையாக நடந்தது. மேலும், இந்த கோவிலில், காத்தாயி அம்மன், துர்கையம்மன், மாரியம்மன், வடிவுடையம்மன், ஐந்து தலை நாகம், நந்தி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஸ்வாமி சன்னிதிகளும் தனித்தனியே உள்ளது. பூஜைகளை கணேசன் குருக்கள் தலைமையேற்று நடத்தினார், விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வீரமணிகண்டன் குடும்பத்தினர். செய்திருந்தனர்.