பதிவு செய்த நாள்
15
பிப்
2018
11:02
பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழாவில், திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. பழநி மலைக்கோயில் உபகோயிலான, கிழக்குரதவீதியில் உள்ள, மாரியம்மன் கோயிலில் பிப்.,9 முதல் முதல் மார்ச் 1 வரை மாசித்திருவிழா நடக்கிறது.
இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம்சாட்டும் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருக்கம்பத்திற்கு காணியாளர் அவர்களால் அரிவாள் எடுத்து கொடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3:30மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் பூஜைக்குபின் கோயில் முன்பகுதியில் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.,27ல் திருக்கல்யாணமும், அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. பிப்.,28ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,20 முதல் மார்ச் 1 வரை தினசரி தங்ககுதிரை, வெள்ளியானை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.