பதிவு செய்த நாள்
15
பிப்
2018
12:02
மானாமதுரை: அம்மன் கோயில் பொங்கல் விழாக்களுக்காக தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி மானாமதுரையில் தீவிரமாக நடந்து வருகிறது. மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் பொங்கல் விழா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
இப்பகுதியில் தாயமங்கலம் முத்துமாரியம்மன்,காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன், விருதுநகர், இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, திண்டுக்கல் மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் விழாக்கள் நடைபெற உள்ளன. இந்த திருவிழாக்களுக்காக தற்போது மானாமதுரையில் மண்ணால் ஆன தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இது குறித்துமண் பாண்ட தொழிலாளி வேலு 65, கூறுகையில் தாயமங்கலம், காரைக்குடி, இருக்கன்குடி வியாபாரிகள் தீச்சட்டிகளுக்கு ஆர்டர்கொடுத்துள்ளனர். சட்டிகளில் அம்மன் உருவம் பொறித்து வர்ணம் பூசி தரமாக வழங்குகிறோம். மற்ற ஊர்களை விட விலையும் இங்கு குறைவு என்றார்.