பதிவு செய்த நாள்
15
பிப்
2018
03:02
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஏழு நாள் தெப்ப உற்சவம் இன்று துவங்குகிறது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது, பார்த்தசாரதி பெருமாள் கோவில். நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின் திருக்குளம் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்களை கொண்டு, கைரவிணீ எனும் பெயருடன் விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், இன்று துவங்குகிறது. இதில், முதல் மூன்று நாட்களுக்கு பார்த்தசாரதி சுவாமியும், அடுத்த நான்கு நாட்களில் நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரர் சுவாமிகளும், தெப்பத்தில் தினமும் மாலை, 6:30 மணிக்கு வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, கைரவிணீ தீர்த்த குளம் துாய்மைப்படுத்தப்பட்டது. நேற்று, டேங்கர் லாரிகள் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது.