பதிவு செய்த நாள்
16
பிப்
2018
11:02
பல்லடம் : அவிநாசி மற்றும் பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செத்தினர். பல்லடம், ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில், 43வது குண்டம் திருவிழா நடந்தது. நேற்று காலை, வெண்ணெய் அலங்காரத்துடன் அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செத்தினர். சிறுவர், சிறுமியர், பெண்கள் என பலரும் குண்டம் இறங்கினர். சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரத்தில் ஸ்ரீஅங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று கொடி இறக்குதல், மஹா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மற்றும் அம்பிகை திருவீதி உலா உள்ளிட்டவற்றுடன் விழா நிறைவு பெறுகிறது.· அவிநாசி, காந்திபுரத்தில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், 73வது நந்தா தீப குண்டம் திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, குண்டம் திறக்கப்பட்டு, பூ வார்க்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணி முதல் பக்தர்கள் இறங்கினர். முன்னதாக, அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது. குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப் பட்டது. அதன்பின், சிம்ம வாகனத்தில், அம்மன் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.