பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
திருவள்ளூர்: திருவள்ளூர் தட்சிணா மூர்த்தி கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், பூங்கா நகரில் உள்ள யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், காக்களூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குருபகவானை தரிசனம் செய்து வழிபட்டனர்.