பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
சென்னை: நாகூர் தர்கா கந்துாரி திருவிழாவிற்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக சந்தனக் கட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை, நேற்று தலைமை செயலகத்தில், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம், 11வது தலைமுறை, டாக்டர் சையது கமில் சாகிப்பிடம், முதல்வர் பழனிசாமி வழங்கினார். அப்போது, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், வனத்துறை அமைச்சர், சீனிவாசன், நாகூர் தர்கா தலைவர், சையத் முகமது கலிபா சாகிப் மற்றும் பலர் உடனிருந்தனர்.