ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியாண்டவர் கோவில் தீ மிதி மற்றும் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தைத்தோப்பு அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியாண்டவர் கோவில் சிவராத்திரி உற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் 15ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் திருக்குளத்தில் இருந்து அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தொடர்ந்து நேற்று காலை முதலாம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. இதில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 7:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வரும் 22ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடு களை இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.