நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சிநடந்தது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை ஏம்பலம் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.