பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
சென்னை : தியாகராஜ சுவாமி கோவில், மயிலை விருபாட்சீஸ்வரர் கோவில்களில் மாசி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கொடியேற்றத்துடன் இன்று துவங்கும் இக்கோவிலின் மாசி பிரம்மோற்சவம், சூரிய, சந்திரபிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர வாகனங்களில் சந்திரசேகரர் உற்சவம் என, ஆறு நாட்களுக்கு நடக்கிறது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிப்., 26ல் நடக்கிறது. 28ம் தேதி காலை, திருக்கல்யாணமும், மாலையில், 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.
மார்ச் 1ல், கடலாடு தீர்த்தவாரியுடன் கொடிஇறக்கப்படுகிறது. டூமயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற விருப்பாட்சீஸ்வரர் கோவிலில்,மாசி மாத பிரம்மோற்சவபெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று, கிராம தேவதை வழிபாடு, புற்றுமண் எடுத்தல், யாக சாலை ஆகியவை துவக்கப்பட்டன. பிப்., 22ல், அதிகார நந்தி சேவையும், 25ல், பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, பிப்., 26ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. 27ம் தேதி காலை, சந்திரசேகர பார்வேட்டையும், இரவில், விருப்பாட்சீஸ்வர் சுவாமி, நால்வருக்கு காட்சி தருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1ல், நடராஜர் உற்சவம் நடக்கிறது. இதில், தீர்த்தவாரி கடலாட்டு விழா, திருக்கல்யாண மகோற்சவத்துடன் கொடி இறக்கப்படுகிறது.