கோவை: கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த வாரம் முகூர்த்த கால் நிகழ்ச்சியோடு துவங்கியது. பூச்சாட்டு, கம்பம்நடுதல், தீச்சட்டி, திருவிளக்கு வழிபாடு ஆகியவற்றைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்வசம் நடைபெற உள்ளது. அன்றாடம் இரவு இசை மற்றும் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெறுகின்றன. தேர்த்திருவிழா பிப்., 28ல் மதியம் 2:00 மணிக்கு வடம் பிடிக்கும் நிகழ்ச்சியோடு துவங்குகிறது. இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீவிபத்தை தொடர்ந்து, விழாக்காலங்களில் தேருக்கு பாதுகாப்பு அளிக்க அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து கோனியம்மன் தேருக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.