காஞ்சிபுரம்: தேர்வில் அதிக மதிப்பெண் பெற, காஞ்சிபுரம் ஹயக்ரீவர் கோவிலில் நடந்த லட்சார்ச்சனையில், ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீதுாப்புல் பரகால மடத்தின், லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. அரசு பொதுத்தேர்வில் மாணவ - மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி வெற்றி பெற வேண்டி, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.இதில், கல்வி கடவுளான லஷ்மி ஹயக்ரீவருக்கு அர்ச்சனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. லட்சார்ச்சனையில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு எழுதுபொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.