பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொய்யாமொழி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், திருமல்ராஜா தெருவில், பொய்யாமொழி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, 17ம் தேதி, சோடஸ மகா கணபதி ஹோமம், கோபூஜை நடந்தது. அன்று மாலை, ’விநாயகர் பெருமை’ குறித்து சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம், காலை, 8:00 மணிக்கு யாகசாலை பிரவேஷம் கும்ப ஜலம் திரட்டுதலும், இரவு, ’விநாயகர் புராணம்’ சொற்பொழிவும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை, 7:00 மணிக்கு, ஹோமம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மகா அபிஷேகமும், விசேஷ அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.