பதிவு செய்த நாள்
20
பிப்
2018
02:02
குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா இன்று நடக்கிறது. குமாரபாளையத்தில், காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால், பூச்சாட்டுதல் வைபவம்,கடந்த, 13ல் நடந்தது. இன்று, மறு பூச்சாட்டு நடக்கிறது. மேலும், வாசுகி நகர், கோட்டைமேடு, கள்ளிபாளையம், பெருமாபாளையம், சுள்ளிமடைதோட்டம், சின்னப்பநாயக்கன்பாளையம், அம்மன் நகர், கண்ணகி நகர், காவேரி நகர் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களிலும், இன்று இரவு, 7:00 மணியளவில் பூச்சாட்டு விழா நடைபெற உள்ளது.