மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி பஞ்., பூலக்காட்டு நகர் சில்லாங்காட்டு தோட்டத்தில், மகா கணபதி, அங்காளம்மன் கோவில் திருப்பணி நடந்தது. முடிந்த நிலையில், மகா கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. சரவணமாணிக்க சிவாச்சாரியார் தலைமையில், நேற்று காலை, அங்காளம்மன், கன்னிமார், பாட்டப்பசுவாமி, கருப்பண்ணசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபி?ஷகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.