பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
நாமக்கல்: நாமக்கல், பகவதியம்மன் கோவில் கும்பாபி ?ஷகம், 25ல் நடக்கிறது. நாமக்கல், வண்டிக்கார தெரு, பேட்டை சுண்ணாம்புக்கார தெரு, பகவதி அம்மன், விநாயகர், நவக்கிரகங்கள், முருகன் மற்றும் துர்க்கையம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, வரும், 25ல் கும்பாபி ?ஷகம் நடக்கிறது. 22 காலை, 4:00 மணிக்கு கணபதி ?ஹாமம், 6:00 மணிக்கு மோகனூர் ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. 23 காலை, 8:15 மணிக்கு பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மாலை, 6:30 மணிக்கு முதற்காலை யாக பூஜை, 24 காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 10:35 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு, அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடக்கிறது. வரும், 25 காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்கி, 9:00 மணிக்கு விமான கலசங்களுக்கு, பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபி ?ஷகம் நடைபெற்று, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 5:30 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள் செய்துள்ளனர்.