காரைக்கால் : திருநள்ளார் சனி பகவான் கோவில் அன்னதான உண்டியலில், ரூ.32 லட்சம் காணிக்கை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். . திருநள்ளார் சனி பகவான் கோவிலில் தங்கத்தேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அன்னதான உண்டியல் நிரம்பியதால், நேற்று முன்தினம், முதல்கட்டமாக உண்டியல் என்னும் பணி தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முதல் கட்டமாக ரூ.32 லட்சத்து 33 ஆயிரம் எண்ணப்பட்டது. இருதினம் உண்டியல் என்னும் பணிகள் நடைபெறும் என்று கோவில் அதிகாரி தெரிவித்துள்ளார்.