பதிவு செய்த நாள்
22
பிப்
2018
11:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் துவக்கமாக கடந்த, 13ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது. கம்பம் நடுதல் விழாவை முன்னிட்டு, நேற்று இரவு, 9:00 மணிக்கு அணி எடுப்பு நிகழ்ச்சியும், நேற்று இரவு 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கம்பம் நடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை கொத்துக்களை வைத்தும், உப்பு கொட்டியும் பக்தர்கள் வழிபட்டனர். நாளை, 23ம் தேதி இரவு கரியகாளியம்மனுக்கு கடைசிநாள் அபிேஷகம், 27ம் தேதி இரவு பூவோடு வைத்தல், மார்ச், 2ம் தேதி இரவு கிராம சாந்தியும்; 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச், 7ம் தேதி காலை மாவிளக்கு, திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேர் முதல் நாள் வடம் பிடிக்கப்படுகிறது. வரும், 8ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டம், 9ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம் முடிந்து, தேர் நிலைக்கு வருகிறது.