திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று சூர்யபிரபை வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன், மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.