பதிவு செய்த நாள்
22
பிப்
2018
12:02
மல்லசமுத்திரம்: காங்கேயம்பாளைம், பெரியாண்டிச்சியம்மன் கோவில் முப்பூசை விழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மோர்பாளையம் அருகே, காங்கேயம்பாளையம் பெரியாண்டிச்சியம்மன் கோவிலில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, முப்பூசை திருவிழா நடந்தது. மேல்மலையனூர் புற்றுமண், சடையாண்டி ஊற்றுக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, பதி போடப்பட்டது. தொடர்ந்து, சக்தி அழைத்து அம்மன் கண் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து, ஆடு, கிடா போன்றவற்றை பலி கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று காலை சுவாமிக்கு மகா பூஜை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, தர்மகர்த்தா துரைசாமி, பூசாரி தங்கம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.