பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மார்க்கண்டேய முனிவரால் வழிபடப்பட்டு, சேரமன்னனால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது; இறகுகளுடன் இறைவன் இருப்பது என, பல சிறப்புகளை கொண்டது, இக்கோவில். மன்னீஸ்வரருக்கு கும்பாபிேஷகம் நடந்து, 14 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், கோவிலில் வசந்த மண்டபம், சிறிய சன்னதிகளுக்கு விமானம், கோவில் பிரகாரம் முழுவதும் தளம் அமைத்தல், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேல்தளம் அமைத்தல் என இரண்டு கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. திருப்பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிேஷக விழா வரும், 27ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. 28ம் தேதி கணபதி ேஹாமம், நவகிரக ேஹாமம் நடக்கிறது.மார்ச் 1ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 2ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜை, முளைப்பாரி எடுத்து வருதலும் 3ம் தேதி நான்கு மற்றும் ஐந்து கால பூஜைகளும் நடக்கின்றன. 4ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, ஆறாம் கால பூஜையை தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு, பரிவார மூர்த்திகளுக்கும், காலை, 8:00 மணிக்கு விமானம், ராஜகோபுரம், அருந்தவச் செல்வி, மன்னீஸ்வரருக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. மடாதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அன்று மாலை, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.