சின்னாளபட்டி, சின்னாளபட்டி ஜீவா நகரில், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவை முன்னிட்டு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.