கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாத யாத்திரை பயணம் துவங்கியது. கள்ளக்குறிச்சியிலிருந்து, திருக்கோவிலுார் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையிலான பாகவத கோஷ்டியினர், ஆண்டுதோறும் திருப்பதிக்கு பாத யாத்திரை செல்கின்றனர். இதன்படி, இந்தாண்டும் கள்ளக்குறிச்சியிலிருந்து பாகவத கோஷ்டியினர் 40க்கும் மேற்பட்டவர்கள், பாத யாத்திரையை துவக்கி உள்ளனர். இவர்களுடன் திருக்கோவிலுார் பாகவத கோஷ்டியினரும், பாத யாத்திரையாக சென்று, திருப்பதியில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கள்ளக்குறிச்சியில், இந்த யாத்திரைக்குழுவினருக்கு, வைஷ்ணவ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.