Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் ... ஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் வழிபாடு ஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் நெய் தீபம் விற்க தடை: பாதுகாப்பு கருதி நடவடிக்கை
எழுத்தின் அளவு:
கோவிலில் நெய் தீபம் விற்க தடை: பாதுகாப்பு கருதி நடவடிக்கை

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
11:02

திருப்பூர்: பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவில்களில் நெய் தீபம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை அப்புறப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.சமீபத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல், வேறுசில கோவில்களிலும், தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விபத்து ஏற்படாதவாறு, கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் வளாகத்தில், தீத்தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தடுப்பதற்கு குறித்து, கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கோவில்களில், பல்வேறு இடங்களில் பக்தர்களால் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.

இதனால் துாண்கள், தளம் உள்ளிட்டவற்றில் எண்ணெய் படிந்து அசுத்தமாகிறது. மேலும், தீ விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், நெய் தீபம் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. கோவில்களில், பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு அணையாத தீபம் அமைக்க வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெயை ஊற்ற, சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில், கடைகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது. இருக்கும் கடைகளை, உடனடியாக காலி செய்ய வேண்டும். மின் கசிவால் விபத்து ஏற்படாத வகையில், வயரிங் மற்றும் மின் சாதனங்களை ஆய்வு செய்து, புதுப்பிக்க வேண்டும். கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கோவில்களில் தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு, தீயணைப்பு துறை மூலம், கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மின் சாதனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar