பதிவு செய்த நாள்
23
பிப்
2018
11:02
காஞ்சிபுரம் : அஷ்டபுஜ பெருமாள் கோவில் உண்டியலில், 3.08 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கை கிடைத்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், டிச., 26ல், உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், நேற்று காலை, கோவிலில் உள்ள நான்கு உண்டியல்கள் திறக்கப்பட்டு, செயல் அலுவலர், தக்கார், சரக ஆய்வாளர், மேலாளர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 3.08 லட்சம் ரூபாய் கிடைத்தது.