பதிவு செய்த நாள்
23
பிப்
2018
12:02
சென்னை : உலக நன்மைக்காகவும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாணவ - மாணவியர் தேர்ச்சி பெறவும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஹோமங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு பிராமணர் சங்கம், கொட்டிவாக்கம் கிளை சார்பில், ஆண்டுதோறும், மாணவ - மாணவியர் பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, பிப்., 25ம் தேதி, சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் உள்ள, சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. காலை, 8:00 மணி முதல், 11:30 மணி வரை ஹயக்ரீவ, சுதர்ஷன, மேதா தட்சிணாமூர்த்தி, அம்ருத மிருத்யுஞ்சய, மூல மந்திர ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. இதில், அனைத்து பள்ளி, மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்கலாம். சங்கல்பம் செய்துக் கொள்வதற்கு மட்டும், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், நாராயணன், மாநில மூத்த பொதுச் செயலர், ஜெகந்நாதன், ஜெயவர்தன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.