பதிவு செய்த நாள்
24
பிப்
2018
02:02
திருத்தணி : திருத்தணியில் நடந்த, கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
திருத்தணி - அரக்கேணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில் கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா, (பிப்.23) வெகு விமரிசையாக நடந்தது. இதில், உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷே கம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. அதன் பின் நடந்த கல்யாண மாலை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, நெமிலி குருக்கள் ரங்கநாதன் மற்றும் விழாக் குழுவினர் செய்திரு ந்தனர். முன்னதாக பரிகார பூஜைகள் நடந்தன. இங்கு, ஒவ்வொரு மாதமும் கிருத்திகை விழா மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில், கல்யாண உற்சவ பூஜை நடக்கிறது.