சங்ககிரி, நல்லப்பநாய்க்கன் தெருவில்,ஆதிபராசக்தி மன்ற பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2018 04:02
சங்ககிரி : சங்ககிரி, நல்லப்பநாய்க்கன் தெருவில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பக்தர்கள் சார்பில், (பிப்.25) சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
மேல் மருவத்தூர் ஆதிபாரசக்தி அடிகளாரின் இளைய மகன் செந்தில்குமார், ஜோதி விளக்கை ஏற்றி வைத்து, பக்தர்களுக்கு குங்குமம் வழங்கி ஆசிர்வதித்தார். செந்நிற ஆடை அணிந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, ஓம் சக்தி, பராசக்தி என, கோஷம் எழுப்பி ஊர்வலம் சென்றனர்.