Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்ககிரி, நல்லப்பநாய்க்கன் ... செம்பை சங்கீத உற்ஸவம் நிறைவு : குருவுக்கு ஜேசுதாஸ் இசை அஞ்சலி செம்பை சங்கீத உற்ஸவம் நிறைவு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
10:02

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ’தியாக ராஜா... நமச்சிவாயா’ கோஷம் விண்ணதிர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை  வடம் பிடித்து இழுத்தனர்.

Default Image
Next News

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோவில், 2000 ஆண்டுகள் பழமையானது. விழாக் காலங்களில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த ஆண்டு, மாசி பிரம்மோற்சவம், 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா துவங்கியது முதல், உற்சவரான சந்தரசேகரர், சந்திர மற்றும் சூரிய பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அஸ்தமானகிரி, அதிகார நந்தி, யானை, புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை, 7:00 மணிக்கு, தீபாராதனையுடன் துவங்கியது. மேளவாத்தியங்களுடன், 108 சங்குகள் முழங்க, அபிஷேக அலங்காரத்தில், சந்தர சேகரர் திருத்தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள், ’தியாக ராஜா... நமச்சிவாயா’ என, விண்ணதிர முழங்கிய படி, வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி சுற்றி, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வந்து, சன்னதி தெருவில் நிலையை அடைந்தது.

18 திருநடனம்: மாலையில், சந்தரசேகரர் திருத்தேரில் இருந்து, கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, குதிரை வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும், சந்தரசேகரர் மாடவீதிகளில் உற்சவம் காண்பார். பிரம்மோற்சவத்தின், முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் - வடிவுடையம்மன் திருக்கல்யாணம், 28ம் தேதி காலையிலும், இரவில் மகிழடி சேவையும் நடைபெற உள்ளது. மார்ச், 1ல், கடலாடு தீர்த்தவாரி உற்சவம், இரவில், கொடியிறக்கம்; 2ம் தேதி இரவு, தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம், 18 திருநடனத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுறும். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார ... மேலும்
 
temple news
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவில் மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar