செம்பை சங்கீத உற்ஸவம் நிறைவு : குருவுக்கு ஜேசுதாஸ் இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2018 11:02
பாலக்காடு: கேரளா பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோயிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்ஸவம் நேற்று நிறைவுபெற்றது.பார்த்தசாரதி கோயிலில் சங்கீத உற்ஸவம் ஆண்டுதோறும் நடக்கிறது.
கர்நாடக இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதர் குடும்பத்தினர் நடத்தும் இவ்விழாவின் கொடியேற்று விழா பிப்.,22ல் துவங்கியது.நேற்று காலை 9:45 மணிக்கு தியாகராஜ சுவாமிகளை நினைவூட்டும் உஞ்சவிருத்தி பஜனை, கோதண்ட பாகவதர் தலைமையில் நடந்தது. 10:45 மணிக்கு மண்ணுார் ராஜகுமார உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. இளம் கலைஞர்கள் சங்கீத ஆராதனை நடத்தினர்.மாலையில் சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பிரகாஷ் உள்ளியேரி குழுவினரின் ஹார்மோனியம் கச்சேரி நடந்தது. இரவு 9:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும், கர்நாடக இசை கலைஞருமான ஜேசுதாசின் கச்சேரி நடந்தது. இசை கலைஞர் ஜெயனின் சங்கீத ஆராதனையுடன் விழா நிறைவுபெற்றது.