உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2018 12:02
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள உய்யக்கொண்டான் சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 21-ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. 22-ம் தேதி நவக்கிரக ேஹாமம்; 23-ல் அஷ்டலட்சுமி ேஹாமம், பிரசன்னாஅபிசேகம்; 24-ல் இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜை; 25-ம் தேதி நான்காம்கால, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடந்து.
முக்கிய நிகழ்ச்சியான விமானம் மற்றும் மூலஸ்தானம் கும்பாபிசேகம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 7:15 மணிக்கு ஆறாம்கால பூஜை, 9:00 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. 9:20 மணிக்கு கடம் புறப்பாடும், 9:55 முதல் 10:00 மணிக்குள் விமானம் கும்பாபிசேகமும், 10:10 மணிக்கு மூலஸ்தான கும்பாபிசேகமும் நடந்தது. மூலஸ்தானத்தில் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தினர். விமானத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.இதில் காரைக்குடி மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மாலை 4:30 மணிக்கு மகாஅபிசேகம் நடந்தது. ஏற்பாடுகளை உ.சிறுவயல் நகரத்தார் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.