பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
அன்னுார்,: சோழர் காலத்திய அன்னுார் சின்னம்மன், பெரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அன்னுார், ஓதிமலை ரோட்டில், பெரியம்மன் கோவிலும், மேட்டுப்பாளையம் ரோட்டில், சின்ன அம்மன் கோவிலும் உள்ளன. சோழர் காலத்தில், இக்கோவில்களில், அம்மன் கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு, புதிதாக கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கோபுரம் மற்றும் சுற்றுப்பிரகாரம் கட்டும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, பிப்.,24ம் தேதி, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:40 மணிக்கு சின்னம்மன் மூலஸ்தான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலையிலிருந்து, புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு வரப்பட்டு, காலை, 9:35 மணிக்கு, பெரியம்மன் கோவில் கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் அருளுரை வழங்கினார். சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை செய்தனர்.