பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
வேலூர்: வேலூர் சொர்ணலட்சுமி கோவிலில் கும்பாபி ?ஷகம் நடந்தது. வேலூர், ஸ்ரீபுரம் தங்க கோவிலில், 70 கிலோ தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி சிலைக்கு, பக்தர்கள் தங்கள் கையால் அபி?ஷகம் செய்து வந்தனர். இந்நிலையில், தங்கக் கோவிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டு, அதில், சொர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவில் கும்பி?ஷகம் விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. சக்தி அம்மா, சொர்ணலட்சுமி கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ?ஷகத்தை நடத்தினார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
* வேலூர், தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் மகா விஷ்ணு துர்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபி?ஷகம் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்தது. தொடந்து அம்மனுக்கு அபி?ஷகம், அன்னதானம், சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.