Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் ... மாசி மக திருவிழா: பல்லக்கு ஊர்வலம் மாசி மக திருவிழா: பல்லக்கு ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசிமகம்: கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2018
12:03

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரியில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Default Image
Next News

மாசிமாத விழாவினை முன்னிட்டு கடந்த 20ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 5 சிவாலயங்களில் பத்துநாள் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக  காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். பின்னர் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

தேரோட்டம்: மாசி மகத் திருவிழாவின் ஒரு பகுதியாக வைணவத் தலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோவில்களில் கடந்த 21 ம் கொடியேற்றப்பட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை சக்கரபாணிசுவாமி உபநாச்சியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இத்தேரில் பழங்கள், காய்கறிகள், மஞ்சள், பனை உள்ளிட்ட 108 மங்கள் பொருள்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar